மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் நாடாளுமன்றத்தில் இன்று (30.06) அறிவித்தார்.
பல பிரிவுகள் அரசியலமைப்பை மீறுவதாகவும், நாடாளுமன்றின் விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் ஒப்புதல் பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவாறு சில பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் இந்த மீறல்கள் பொருந்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.







