தேசிய அடையாள அட்டைகளை தொடர்ந்து வழங்க முடியும் – ஆட்பதிவுத் திணைக்களம்

155
0
Spread the love

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடையாள அட்டைகளை அச்சிடும் பணிகள் முறையாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக தினமும் திணைக்களத்திற்கு வரும் பிற பொது விண்ணப்பதாரர்களுக்கும் தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு பிறந்த விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here