சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 57,200 சிகரெட்டுகள் பறிமுதல்

123
0
Spread the love

சட்டவிரோதமான முறையில் விமானம் மூலம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 57,200 சிகரெட்டுகளைக் கொண்ட 286 கார்டன் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 42 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here