உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பின் மீது தாக்குதல்

82
0
Spread the love

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு பகுதியுடன் தொடர்புடைய ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேலால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் ஆபத்தானவை மற்றும் பொறுப்பற்றவை என கட்டார் தெரிவித்துள்ளது.

கட்டார் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் ஒரே எரிவாயு பகுதியில் இருந்தே எரிவாயுவை பெறுகின்றன.

இதன் ஈரானியப் பகுதி தெற்கு பேர்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

அந்த இடத்தில் உள்ள தனது பெட்ரோகெமிக்கல் வளாகம் தாக்கப்பட்டதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.

எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கட்டார் வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் மாஜித் அல் அன்சாரி தெரிவித்துள்ளார்.

முக்கியமான வசதிகளை இலக்கு வைப்பதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று கூறிய அவர், சர்வதேச சட்டங்களுக்கு இணங்கி நடக்குமாறும் பதற்றத்தைத் தணிக்கப் பாடுபடுமாறும் அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here