1,820 லீற்றர் டீசலுடன் மற்றுமொருவர் கைது

57
0
Spread the love

அனுமதிப்பத்திரமின்றி 1,820 லீற்றர் டீசலை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் சேருனுவர பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தத் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சேருனுவர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருனுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here