நிகவெரட்டிய, கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் காணாமல் போயிருந்த மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி, தெதுறு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 6 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, காணாமல் போன மேலும் இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







