2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சு பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளது.
அநேகமாக எதிர்வரும் 5ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும இன்று (30) பிற்பகல் 1 மணிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) முன்னிலையில் ஆஜராகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.







