பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்

6
0
Spread the love

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இவ்வழக்கு தொடர்பான வாய்மொழி சமர்ப்பணங்களின் விசாரணை இன்று (02) நிறைவடைந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here