தமது நிறுவனம் வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் கட்டுப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை வௌியிட்டுள்ளது.
அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்கள், மாகாண மற்றும் பிரதான செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள், கூட்டுத்தாபன பிரதானிகள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளுக்கு இதனை நினைவூட்டும் வகையில் உத்தியோகபூர்வ தகவல் அனுப்பப்பட்டுள்ளது.







