சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும்
போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மலையக சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள்
சபை அலுவலகத்துக்கு முன்பாகவும் இன்று (26.07) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணிக்கு நீதிக் கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்படுகிறது.
பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.







