ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு

58
0
Spread the love

ரயில் சாரதிகள் இன்று (29.07) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில், 48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமிஞ்சை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்; கே.ஏ.யு. கொண்டசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ரயில் சாரதிகள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பாக, தீர்வு காணப்படாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here