பிரியந்த ஜெயக்கொடிக்கு பிணை

54
0
Spread the love

பொய்யான முறைப்பாடு அளித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடிக்கு மஹர நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி ராகமவில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மே தனக்கு எதிராகக் கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் காவல்துறையில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here