இலங்கை கிரிக்கெட் அணி வீரரும் சர்வதேச போட்டி நடுவருமான ரொஷான் மஹாநாம, தேசிய விளையாட்டு பேரவையில் இருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, தாம் தேசிய விளையாட்டு பேரவையில் இருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2025 பெப்ரவரி 14 ஆம் திகதியன்று, 2025-2028 காலகட்டத்திற்கு மஹாநாம , தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவர் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதியன்று இந்த நியமனத்தை முறையாக ஏற்றுக்கொண்டார்.







