பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்ற கருத்தை ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நிராகரித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதாரமற்ற கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
ஹரிணி அமரசூரிய, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்பது, எதிர்க்கட்சியினரின் கனவாகவே இருக்கும் என்றும், டில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.







