நேபாள உயர் நீதிமன்றுக்கும் தீ வைப்பு

150
0
Spread the love

நேபாளத்தில் போராட்டக்காரர்கள் இன்று காத்மாண்டுவில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கும் தீ வைத்துள்ளனர்.

அத்துடன் போராட்டக்காரர்கள் பாராளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமரின் வீட்டிற்கும் தீ வைத்து பல கட்டிடங்களை அழித்துள்ளனர்.

இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டவர்களில் அமைச்சர்களும் அடங்குவர் என்றும், மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு உத்தரவையும் மீறி நடத்தப்பட்ட போராட்டங்களின் போது, ​​பிரதமர் ஒலியின் வீடு, ஜனாதிபதி ராம் சரண் பவ்டெலின் வீடு, நேபாள ஆளும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் மற்றும் பிற அரசியல்வாதிகளின் வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

அதன் பிறகு, நேபாள பாராளுமன்ற வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள் அங்குள்ள கட்டிடங்களுக்கும் தீ வைத்தனர்.

நேபாள அரசாங்கத்தின் அமைச்சர்களின் அலுவலகங்களைக் கொண்ட சிங்கா தர்பார் கட்டிடத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இதற்கிடையில், நாட்டின் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

26 சமூக வலைத்தளங்களை தடை செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பாராளுமன்றத்தின் முன் நேற்று போராட்டங்கள் தொடங்கின.

சமூக வலைத்தள தடையை எதிர்த்து வீதிகளில் இறங்கியவர்களில் பெரும்பாலோர் புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் ஆகும்.

தொடர்ச்சியான துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைத் தொடர்ந்து, நேபாள அரசாங்கம் இன்று அனைத்து சமூக வலைத்தளங்களையும் வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும், இவை அனைத்தையும் மீறி, ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here