அண்மையில் வெளியிடப்பட்ட 2000 ரூபா நாணயத்தாள் படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் ஊடாக புழக்கத்தில் விடப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி தனது 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வகையில் அண்மையில் 2000 ரூபா புதிய நாணயத்தாள் வெளியிடப்பட்டது.
புதிய நாணயத்தாள் சீராக ஏற்றுக்கொள்ளப்பட்டு விநியோகிக்கப்படுவதை எளிதாக்கும் வகையில், உரிமம் பெற்ற வணிக வங்கிகள் தங்கள் பண கையாளும் இயந்திரங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செயன்முறையின் வேகத்திற்கேற்ப, புதிய நாணயத்தாள் படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளவுத்திருத்த செயன்முறை நிறைவடைந்ததும் புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகள் ஊடாகவும் தடையின்றி இடமளிக்கப்படும் என்று மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.







