டிசம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 50,222 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்.
இதற்கமைய இந்தியாவிலிருந்து 10,453 சுற்றுலாப் பயணிகள் குறித்த காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் ரஷ்யாவிலிருந்து 5,420 பேரும் பிரித்தானியாவிலிருந்து 3,823 பேரும் வருகை தந்துள்ளனர்.
அத்துடன் பிரான்ஸிருந்து 2,627 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







