ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவர்கள் இருவர் காயமடைந்தனர்.
கைதானவர்களில் 49 வயது பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார்.
ஏனைய சந்தேக நபர்கள் 18, 33, 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
![88b47a9f-shooting[1]-494730-495861-553104_850x460 (1)](https://varnamnews.com/wp-content/uploads/2026/01/88b47a9f-shooting1-494730-495861-553104_850x460-1.jpg?v=1768888744)






