புதன்கிழமைகளில் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை

19
0
Spread the love

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று, அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளையும் அன்றைய தினம் நடத்த வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச பாடசாலைகளும் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் முன்பள்ளிகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் விரிவுரைகளை நடத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here