கொஹுவலையில் சீனப் பெண் குத்திக் கொலை

86
0
Spread the love

கொஹுவலை, களுபோவில பிரதேசத்திலுள்ள வீடொன்றின் அறைக்குள் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 26 வயதுடைய சீன நாட்டுப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கொஹுவலை, களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளதோடு, அவரது முன்னாள் சீனக் காதலனாலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here