ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

79
0
Spread the love

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று (24) காலை 11.00 மணி முதல் மீண்டும் அனைத்துப் பொதுச் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று (23) ஏற்பட்ட இந்தக் கணினி அமைப்புக் கோளாறு காரணமாக, இன்றைய தினம் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், இன்று காலை முதல் பெருமளவிலான மக்கள் திணைக்கள வளாகத்தில் திரண்டிருந்ததோடு, அங்கு ஒருவித பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here