மார்ச் மாதத்தில் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

34
0
Spread the love

மார்ச் மாதத்தின் கடந்த 29 நாட்களில் 175,661 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 45,650 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது மொத்த எண்ணிக்கையில் 26% ஆகும்.

அத்துடன், இக்காலப்பகுதியில் ரஷ்யாவிலிருந்து 15,579 பேரும், ஜெர்மனியிலிருந்து 12,603 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 17,030 பேரும், சீனாவிலிருந்து 13,449 பேரும் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 10,219 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் மார்ச் 29 ஆம் திகதி வரையிலான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 732,316 ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில் இந்தியாவிலிருந்து 145,390 பேரும், ரஷ்யாவிலிருந்து 65,812 பேரும் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 77,358 பேரும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here