சுரேஷ் சலே பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்

38
0
Spread the love

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த வழக்கு விசாரணையின் போது, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார பிறப்பித்த உத்தரவிற்கமைய, சந்தேகநபரான சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக சுரேஷ் சலேவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பெயரிட்டுள்ளது.

சுரேஷ் சலே சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடந்த வழக்குத் தவணையின் போது கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவிற்கு அமையவே அவர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் சற்று நேரத்தில் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here