கொழும்பு – புத்தளம் ரயில் சேவை மீண்டும் வழமைக்கு

33
0
Spread the love

திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு – புத்தளம் ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

இன்று (14) பிற்பகல் முதல் புத்தளம் ரயில் மார்க்கத்தில் புகையிரதங்கள் வழமையான கால அட்டவணையின்படி இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தில்அடி பகுதியில் நேற்று புகையிரத பாதை பல இடங்களில் நீரில் மூழ்கியிருந்தது.

இதன் காரணமாக நேற்று முதல் கொழும்பு – புத்தளம் ரயில் சேவை சிலாபம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

வெள்ள நீர் வடிந்தோடியதையடுத்து, இன்று பிற்பகல் 3:00 மணி முதல் புத்தளம் வரையிலான புகையிரத போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் மட்டும் தற்போது 1,264 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here