தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் இன்றைய தினம் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் இப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.







