டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரிப்பு

5
0
Spread the love

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவிக்கையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்கள் அறிக்கைப்படுத்தப்படுவது 50% முதல் 55% வரையான சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதேபோல், இந்த வருடத்தில் கடந்த ஜூன் 5ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 36,168 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், அவர்களில் 50 சதவீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

மேல் மாகாணத்திற்கு மேலதிகமாக, தெற்கு மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் மற்றும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பதற்கு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நிலவிய மழைத்துடனான வானிலையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய வைத்தியர், ‘டிட்வா’ புயல் பின்னர் பெருமளவில் குப்பைகள் சேர்ந்ததன் காரணமாக கொசுக்கள் பெருகும் இடங்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here