கொழும்பு – தலைமன்னார் புகையிரத சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

41
0
Spread the love

டிட்வா சூறாவளியால் புகையிரத பாதைகள் பல இடங்களில் சேதமடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – தலைமன்னார் புகையிரத சேவை இன்று (24.07) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.

பாதை புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அண்மையில் வெற்றிகரமான சோதனை ஓட்டம் (வெள்ளோட்டம்) நடத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் பயணிகள் சேவையை மீள ஆரம்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.50 மணிக்கு தலைமன்னார் நோக்கி புகையிரதம் புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டதால், மன்னார் மாவட்ட மக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். குறிப்பாக, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையில், புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது மன்னார் மக்களுகளின் நீண்ட தூரப் பயணத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்தும் என மக்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here