கடவுச்சீட்டுடன் தொடர்புடைய சேவைகளுக்கு தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தல்

65
0
Spread the love

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின், கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அல்லது செயன்முறையை விரைவுபடுத்த தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் வளாகத்திற்குள் அல்லது வெளியே செயற்படும் தரகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்றும், கடவுச்சீட்டு கட்டணங்களுக்கு பணம் செலுத்தும் இடத்தில் மாத்திரம் அதனை செலுத்தி உத்தியோகப்பூர்வ பற்றுச்சீட்டினை பெற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழமையான மற்றும் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் தற்போது தினமும் காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here