ஹந்தான மலைப் பகுதிக்குச் சுற்றுலா சென்ற மாணவ குழுவொன்று வழிதவறிச் சென்ற நிலையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மலை உச்சிக்குச் சென்ற மாணவர்கள் நேற்று மாலை கீழே திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட கடும் பனி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக வழிதவறிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து மாணவர்கள் காணாமற்போனதாகத் தகவல் கிடைத்தவுடன், இராணுவம் மற்றும் தலாத்துஓயா பொலிஸாரால் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் அதிகாலை0 4 மணியளவில், காணாமல் போன 08 மாணவர்களையும் இராணுவமும் பொலிஸாரும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட மாணவர்கள் மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.







