நீர்கொழும்பில் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது
பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
நீர்கொழும்பு- துங்கல்பிடிய பகுதியில்
இன்று (03.07) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மோட்டார் சைக்கிள் லொறியொன்றுடன் மோதிய போதிலும் நிறுத்தாது சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.







