கேகாலையில் 2 பேருந்துகள் மோதி கோர விபத்து

33
0
Spread the love

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

​ கேகாலை – கரடுபன பகுதியில் இன்று (3) காலை 6:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

​ ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

​ விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here