நாரம்மல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தைகள் உட்பட மூவர் பலி

52
0
Spread the love

குருநாகல், நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நாரம்மல – கிரிஉல்ல வீதியில் நேற்று பிற்பகல் (19.07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரொன்று வீதியை விட்டு விலகி வலது பக்கத்தின் எதிர் திசையில் பயணித்த பேருந்து ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் மஹவ, திவுல்லாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய காரின் சாரதியும், 09 மாதங்கள் மற்றும் 11 மாதங்களுடைய இரண்டு பெண்குழந்தைகளும் அடங்குவர்.

விபத்தில் காயமடைந்த பேருந்து சாரதி, நடத்துனர் மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வெல்லவ பொலிஸ் பிரிவின் வாரியப்பொல – கும்புக்கெடே வீதியில் உள்ள கபுஹேன பகுதியில் இடம்பெற்ற
மற்றொரு விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குருநாகல் கும்புக்கெடே நோக்கிச் சென்ற லொறியே வீதியில் சென்றவர் மீது மோதியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here