ரஷ்யாவில் 50 பேருடன் பயணித்த விமானம் விபத்து

53
0
Spread the love

ரஷ்யாவில் 50 பேர் பயணம் செய்த ஏ.என்.-24 பயணிகள் விமானம் காணாமற்போயுள்ளது.

சைபீரியாவை சேர்ந்த அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் விமானம் – சீனாவின் எல்லையையொட்டிய ரஷ்யாவின் அமுர் பிராந்தியத்தில் பறந்தபோது விமானம் ரேடார் தொடர்பை இழந்து மாயமானது.

பயணிகள் விமானத்துடன் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இந்த நிலையில், காணாமற்போன விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள அமுர் என்ற இடத்தில் விமானத்தின் பாகங்கள்
கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதனால் விமானத்தில் பயணம் செய்த 50 பேரின் கதி நிலை என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here