இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கான வரிகளை 20 வீதமாகக் குறைக்க அமெரிக்க அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்
இந்தநிலையில், வரியை 15 வீதமாகக் குறைப்பதை இலங்கை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க வரியை 20வீதமாகக் குறைப்பது, வியட்நாம் மற்றும் பங்களாதேஸூடன் இலங்கையை இணைக்கும்.
எனினும் ஏற்றுமதியாளர்களுக்கு உண்மையான ஊக்கத்தை அளிக்கவேண்டுமாயின் இந்த வரி 15 வீதத்துக்கும் குறைவாக இலக்கு வைக்க வேண்டும்.
இது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்படவேண்டும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.






