கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு இன்று(04.08) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 08 ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை, பொல்கஹவெல, மாத்தளை மற்றும் நாவலப்பிட்டியவிலிருந்து இந்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.







