கொழும்பு கோட்டையிலிருந்து, பதுளை – எல்லை வரை, வார இறுதியில், Ella Weekend Express ரயிலை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும், நீண்ட தூரப் பயண வசதியை விஸ்தரிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, இந்தத் ரயில் சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், 17 ஆம் திகதி 1.45 க்கு பதுளையிலிருந்து புறப்பட்டு, கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.







