பிரித்தானியாவில் இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில், வீதியொன்றில் யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 37 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதியும் இலங்கையைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞர் தற்போது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.







