சூடானில் மண்சரிவு காரணமாக 1000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மழையால் ஏற்பட்ட மண்சரிவில் கிராமமொன்றே தரைமட்டமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒருவர் மட்டுமே பேரழிவில் இருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்ட உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்க ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை சூடான் கோரியுள்ளது.







