வட மாகாண காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது

152
0
Spread the love

பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று (18.09) நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.

காணி பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையே நடந்த விவாதத்தின்போது,
கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், வடக்கில் காணிகள் விடுவிப்பது உட்பட பல பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here