வல்வெட்டித்துறை பொலிகண்டி ஆலடி பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன.
இந்த சம்பவம் இன்று (01.10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பல இலட்சம் பெறுமதியான படகு மற்றும் கடல் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் தற்செயலாக இடம்பெற்றதா அல்லது விஷமிகளால் ஏற்படுத்தப்பட்டதா என மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்ப்பாண செய்தியாளர்
பூ. லின்ரன்








