குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்யும் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 ரூபா குடிநீர் போத்தலை 100 ரூபாவுக்கு விற்பனை செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, குடுகல்வத்த பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவர் குடிநீர் போத்தலை அதிக விற்பனை செய்தமைக்கு
அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் இன்று (13.10) உணவகத்திற்கு எதிராக இந்த அபராதத்தை விதித்துள்ளது.







