மன்னார் இளைஞனின் இயக்கத்தில் உருவான “மடமை தகர்” குறுந்திரைப்படத்திற்கு மீண்டும் ஒரு சர்வதேச விருது

550
0
Spread the love

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடாத்தப்பட்ட “International Art & Heart Film Festival” 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் கவிவர்மனின் இயக்கத்தில் உருவான “மடமை தகர்” எனும் குறுந்திரரைப்படம் விருது பெற்றுள்ளது.

“Best Monologue” என்னும் குறித்த விருது
இக்குறுந்திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரமான மன்னார் ஓலைத்ததொடுவாய், சின்ன கரிசல் பிரதேசத்தினைச் சேர்ந்த சிறுமி ரஞ்சித் குருஸ் சுவேதாவிற்கு கிடைத்துள்ளது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த
சிறுமி ஒருவர் திரைப்படத்துறையில் சர்வதேச ரீதியில் அங்கிகாரம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.

தற்கொலை என்பது பிரச்சி னைகளுக்கான ஒரு தீர்வல்ல என்னும் கருப்பொருளில் இயக்குனர் கவிவர்மனால் உருவாக்கப்பட்ட குறித்த திரைப்படமானது அன்மையில் அவுஸ்திரெலியா நாட்டில் நடாத்தப்பட்ட சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் “சிறந்த இயக்குனர்” என்னும் விருதைப் பெற்றிருந்தமையை அடுத்து
மீண்டுமொரு சர்வதேச விருதைப்
பெற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here