பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், நான்கு மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் சென்று பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அறிவிப்பு இன்று (17.10) நண்பகல் 12.00 மணி முதல் அமுலுக்கு வருகிறது.
இந்த செயன்முறை பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராக மேற்கொள்வதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், இந்த காலம் 03 மணி நேரமாக இருந்தமை குறிப்பிடத்த்ககது.







