பாதாள உலகக் குழு தலைவர் கெஹெல்பத்தர பத்மேவினால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட ரூபா 50 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் முறைகேடான சொத்துக்கள் விசாரிக்கும் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகயில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலக குழுவில் உள்ள நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் பிரகாரம் பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸாரும் குற்றப் புலனாய்வு பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.







