உயர் பதவியில் இருந்த முன்னாள் அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இன்று (22.10) இதனைத் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபரையும் பதவியைப் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.







