வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகம்,அரசாங்க அதிபராக இருக்கும் காலத்தில் பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் பல ஊழல்கள் இடம்பெற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றையதினம்(08.11) உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அமைச்சர் சந்திரசேகரன் நியாயமான அமைச்சராக இருக்க விரும்பினால் அதனை ஒரு விசாரணையாக எடுத்து கொண்டு செல்லுங்கள்.
அதனைவிடுத்து ஊழல் செய்பவர்களோடு இணைந்து கொண்டு செயற்பட்டால் அமைச்சர் சந்திரசேகரனின் பதவிக்காலம் குறைவாகதான் இருக்கும்.
இரண்டு கள்ளர்களை காப்பாற்றும் அமைச்சர் சந்திரசேகர் தான் பெரிய கள்ளர். இவரை இங்குள்ள 159 பேரும் காப்பாற்றுவதால் ஜனாதிபதி அநுரகுமார எவ்வளவு மரியாதையை இழக்கின்றார்” என்றார்.







