பொய்யான தகவல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் – செல்வம் எம்.பி

171
0
Spread the love

சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் தன்மீது சேறுபூசும் வகையில் பொய்யான தகவல்கள் பதிவேற்றப்படுவதால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று(13.11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனூடாக தனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் செயற்பாடுகளை சிறப்புரிமைகள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தி, உரிய நடவடிக்கையை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here