இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல்மயமாக்கும் செயல்முறையான ஈ-நீதிமன்றம் ((e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல்மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை உத்தியாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் உருமாற்றச் செயல்பாட்டின் ஆரம்ப கட்டமாக, தற்போது உயர் நீதிமன்றம் அதன் வழக்கு நிர்வாகத்திற்காக ஒரு இணையதளம் மற்றும் தொடர்புடைய மின்னணு முறைமையை (e-CMS) அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.







