அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிபிசிக்கு எதிராக 05 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
புளோரிடாவில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, ஒளிபரப்பாளர், அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகவும் வர்த்தக நடைமுறைச் சட்டத்தை மீறியதாகவும் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனிடையே, கடந்த மாதம் பிபிசி ட்ரம்பிடம் மன்னிப்பு கோரியிருந்தது. ஆனால், இழப்பீடு வழங்க முடியாது என்றும், அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் பிபிசி தெரிவித்துள்ளது.







