அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று (02.01) அதிகாலை 4.6 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்திலிருநச்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்தியாவின் காஷ்மீரிலும் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.35 அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்புகளோ சொத்து சேதங்களோ ஏற்படவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.







